Monday, August 3, 2009

ரயிலில் ஒரு வானவில்

கடந்த வாரத்தின் கடைசி நாள்
பகல் பொழுதில் பல்லவனில் பயணித்தேன்.
ஏறிய சில நொடிகளிலே நடந்தேறியது
சுற்று சூழல் ஆராய்ச்சி.

பயணச்சீட்டு பரிசோதனையும் ,
சகபயணிகளின் இடப்பெயற்சியும்,
வியாபாரிகளின் விற்பனையும்,
இனிதே அரங்கேறிக்கொண்டிறந்தது.

வழக்கம் போல் வார பத்திரிக்கை வாசிப்பை
விமர்சையாய் துவங்கி இருந்தேன்.
வெப்பம் குறைய தொடங்கி
விழாக்கோலம் கொண்டிருந்தது வான் மேகங்கள் .

ரயிலோசையிலும் ஒரு குயிலோசை கேட்டு
பார்வையை பவ்யமாய் திசை திருப்பினேன் .
சற்றும் எதிர்பார்க்காத ஒரு அழகிய ஷனத்தில்
சலனமாய் மலர்ந்தது அந்த விழி ஈர்ப்பு பரிமாற்றம்.

எப்போது வந்தாள் அந்த அழகு தேவதை ?
இது போல இதயத்தில் இருகோடி கேள்விகள்.
அத்தனை அழகை நான் பார்த்ததே இல்லை.
அத்தனை அழகாகவும் என்னை யாரும் பார்த்ததே இல்லை.

சில்லென்ற மாலை வேலையில்,
சிறு சாரல் மழையில்,
பூப்போல மலர்ந்த வானவில்லை ,
பார்த்து ரசிக்கக்கூட தோன்றவில்லை.

பார்வைகளும் புன்னகைகளும் பரிமாறப்பட,
நேரமும் ரயிலும் நிற்காமல் ஓட,
நாங்கள் இறங்கும் நிலையமும் வந்தது.
பிரியும் நேரம் வானவில்லும் மறைந்தது.

3 comments:

  1. 'piriyum neram vanavillum maraindhadhu'

    arumaiyana varigal...

    ReplyDelete
  2. i just dont understand what u have written .
    yar write in english or hindi.i can read atleast.
    by the way which language is this.

    ReplyDelete
  3. mm.... only you possible... ennamo po..!

    ReplyDelete