Friday, November 6, 2009

மழையே!! மழையே!!


மாலை மழையில்
வேலை முடிந்து
நீர் நிறைந்த சாலையில்
உடல் நினைந்து பயணித்தபோது
மனதில் தோன்றியது...
சில மாதங்களுக்கு முன்னர்
இதே சாலையில்
வாட்டியவெயில் காலத்தில்
வியர்வை சிந்த பயணித்தபோது
மழை வராதா என்று கடவுளை சபித்தது!!

No comments:

Post a Comment